ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே... (அடியே கொல்லுதே...)
(இசை...) ஆண்: இரவும் பகலும் உன்முகம் பெண்: வாடைக் காற்றினில் ஒரு நாள் (இசை...) பெண்: சொன்னால் வார்த்தை என் சுகமே ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே... பெண்: உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் ------------------------------------------------------------------------------------------------ பாடல் : அனல் மேலே பனித்துளி (இசை...) பெண்: எந்தக்காற்றின் அலாவளில் (இசை...) பெண்: சந்தித்தோமே கனாக்களில் ---------------------------------------------------------------------------------------------------
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக்காலத்தில் சரியும்
மண் சரிவைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே... (அடியே கொல்லுதே...)
ஆண்: அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா பாதமும் மீண்டும் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே...
பெண்: அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை (அனல் மேலே பனித்துளி...)
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட (அனல் மேலே பனித்துளி...)
Ava Enna Enna
Karthik,Prasanna
ஆண்: அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சிப் பிச்சித் தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா
(இசை...)
ஆண்: அடங்கா குதிரையப் போல
அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே
படுத்தா தூக்கமும் இல்லை
என் கனவுல தொல்லை
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால
எதுவோ எங்களை சேர்க்க
இருக்கி கயித்துல கோர்க்க
ஓ கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்று ஆடிப்பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காற்றுல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)
(இசை...)
ஆண்: வாழ்க்கை ராட்டிணம் தாண்டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொத நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெழிஞ்சேன்
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்
அது யாருஎன்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளை இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்தைக் கௌப்பி
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)
------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல் : ஏத்தி ஏத்தி ஏத்தி (இசை...) ஆண்: ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி (இசை...) ஆண்: பங்கடிச்சி தெரிஞ்சிக்குவோமே (இசை...) ஆண்: தண்டாலு தினம் எடுப்போமே ------------------------------------------------------------------------------------------------
ஆண்: மச்சி மச்சி
குழு: மொரைச்சிட்டாண்டா
ஆண்: மடக்கி மடக்கி
குழு: அடிச்சிட்டாண்டா
ஆண்: அண்ணாநகரு
குழு: டவரு நீடா
ஆண்: மல்லுக்கட்டி அடிடா
சக்கைப்போடு
குழு: போட்டுட்டாண்டா
ஆண்: சைக்கிள் கேப்பில்
குழு: கவுத்துட்டாண்டா
ஆண்: பார்ட்டி இப்போ
குழு: உனக்குத்தாண்டா
ஆண்: டொம்முனு கட்டிப்புடிடா
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
சூது வாது தெரியாது
சொக்கத் தங்கம் ராஜா
சுத்தும் பக்கம் கிடையாது
முகத்தைக் கழுவு லேசா
ராஜா நான் ராஜா
என் பேட்டைக்கென்றுமே ராஜா
ராஜா நான் ராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா
உன் திமிருக்கு எடுப்பாண்டா டாஜா
ராஜா நான் ராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா (ஏத்தி ஏத்தி ஏத்தி...)
கடைசியில படிச்சிக்குவோமே
சன்ரைஸைப் பார்த்ததில்லை கண்ணின் மணி
எங்களுக்கு இயேர்லி மார்னிங் பத்து மணி
லைட்ஹவுஸ் உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரீட்சையில் பதில் எழுத
பாதிப் பேப்பர்ல நொண்டும்
சுட்டாதான் நெருப்பு
பட்டாதான் பொறுப்பு (ஏத்தி ஏத்தி ஏத்தி...)
பஸ்க்கியும் தான் பல அடிப்போமே
அர்னால்ட் போல ஏத்தி ஆம்சைப் பார்ப்போம்
ஏதாச்சும் சண்ட வந்தா ஆப்ஸ்கண்டாவோம்
ரவுண்டுக்கட்டி கௌப்புங்கடா
ரத்தம் சூடாக இருக்கு
பவருக்கட்டி நொருக்குங்கடா
பறக்க ரெக்கைகள் எதுக்கு
காத்தாடிப்போல போவோண்டா மேல (ஏத்தி ஏத்தி ஏத்தி...)
ஆண்: ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்...
நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
I am love with you..
ஆண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...)
(இசை...)
ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே...
பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவோனோ... ஆருயிரே...
ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வீணான ஒரு கனவு நூறு விடை சொல்லடி
பெண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே..
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ...
நாட்களும் வீணானதே...
(இசை...)
பெண்: கடல் நீரும் பொங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே
ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே...
பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே...
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே...
உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... (முன்தினம் பார்த்தேனே...)
ஆண்: வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா.....
------------------------------------------------------------------------------------------------
ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும்... உந்தன்... முகம்தான்...
வலி கூட... இங்கே... சுகம்தான்...
ஆண்: தொடுவானம் சிவந்துபோகும்
தொலைதூரம் குறைந்துபோகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கிவந்தேனே
இனி உன்னைப் பிரியமாட்டேன்
துளிதூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே...
குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி... ஓ...
(இசை...)
ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனைக் காணும் நேரம் வருமா...
வருமா...
இரு கண்கள் மோட்சம் பெறுமா...
ஆண்: விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்...
உன் மடியில் நான் தூங்க...
எனை வந்து உரசும் காற்றே...
அவளோடு கனவில் நேற்று...
கைக்கோர்த்து நெருங்கினேன்...
கண்ணடித்து நீ ஏங்க...
குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாய் லாஹி...
--------------------------------------------------------------------------------------------
ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும்... உந்தன்... முகம்தான்...
வலி கூட... இங்கே... சுகம்தான்...
ஆண்: தொடுவானம் சிவந்துபோகும்
தொலைதூரம் குறைந்துபோகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கிவந்தேனே
இனி உன்னைப் பிரியமாட்டேன்
துளிதூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே...
குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி... ஓ...
(இசை...)
ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனைக் காணும் நேரம் வருமா...
வருமா...
இரு கண்கள் மோட்சம் பெறுமா...
ஆண்: விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்...
உன் மடியில் நான் தூங்க...
எனை வந்து உரசும் காற்றே...
அவளோடு கனவில் நேற்று...
கைக்கோர்த்து நெருங்கினேன்...
கண்ணடித்து நீ ஏங்க...
குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாய் லாஹி...
------------------------------------------------------------------------------------------------
பாடல் : நெஞ்சுக்குள் பெய்திடும் (இசை...) ஆண்: ஏதோ ஒன்று என்னை ஈர்க்க (இசை...) ஆண்: தூக்கங்களை தூக்கிச் சென்றாய் ஆண்: ஏக்கங்களை தூவிச் சென்றாய் ஆண்: வீசும் காற்றின் வீச்சிலேது
ஆண்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி (நெஞ்சுக்குள் பெய்திடும்...)
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ கோபம் இல்லா
நீ நின்ற இடம் என்றால்
விலையேறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே... (நெஞ்சுக்குள் பெய்திடும்...)
குழு: தூக்கிச் சென்றாய்
உன்னைத்தாண்டி போகும் போது
குழு: போகும் போது
நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒருபோதும் உதிராதே
காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத்தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே (நெஞ்சுக்குள் பெய்திடும்...)



0 comments:
Post a Comment